Home

Showing posts with label கனவு மலர்ந்தது. Show all posts
Showing posts with label கனவு மலர்ந்தது. Show all posts

Monday, 21 December 2020

பல்லக்குத்தூக்கி - சிறுகதை

 

அம்பலவாணன் வாழ்க்கையில எனக்குக் கெடச்ச பெஸ்ட் ஃப்ரண்ட் சார். எனக்கு அட்வைஸர், மென்ட்டர் எல்லாமே அவன்தான். இப்படி அல்பாயுசுல போய்டுவான்னு ஒருநாளும் நெனச்சிகூட பார்த்ததில்லஎன்று நான் சொன்னேன். பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த எக்சைஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலையை மட்டும் அசைத்துக்கொண்டார். ஒரேஒரு கணம் மட்டுமே என்மீது அவருடைய பார்வை படிந்து விலகியது. எதிலும் நிலைகொள்ளாத தன்மையுடன் அருகிலிருந்த தென்னைமரங்களையும் அவற்றைச் சுற்றிச்சுற்றி விளையாடும் அணில்களையும் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

Sunday, 13 December 2020

கனவு மலர்ந்தது - புதிய சிறுகதைத்தொகுதி

  

கவிதை என்ற தலைப்போடு தமிழில் வெளிவந்த நூற்றுக்கணக்கான கவிதைகளைப் படித்திருக்கிறேன். பெரும்பாலான வரிகள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டும்  கல்மேல் பொறிக்கப்பட்ட எழுத்தாக படித்ததுமே நெஞ்சில் ஆழமாக வேரூன்றி இன்றுவரை நிலைத்திருக்கிறது. அது தேவதேவன் எழுதிய கவிதை.  கவிதை என்னும் தலைப்பில் பட்டுப்போய் நிற்கும் ஒரு மரத்தில் எங்கிருந்தோ வந்து அமர்ந்திருக்கும் ஒரு குருவியைப்பற்றிய சித்திரத்தை அவர் முன்வைத்திருந்தார். படித்ததுமே என் மனமும் கண்களும் நிறைந்துவிட்டன. எவ்விதமான நோக்கமோ காரணமோ இல்லாமல் மரக்கிளையில் வந்து அமரும் குருவியைப்போல கவிதைக்குரிய கணம் நிகழ்கிறது. அது தவத்தின் தருணமா அல்லது கருணையின் தருணமா என்பது ஒருபோதும் பிரித்தறிய முடியாத ரகசியம்.