1919இல் இந்தியாவின் தலைமைச்செயலராக இருந்த மாண்டேகுவும் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டுவும் இணைந்து இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்கு சுயாட்சி வழங்கும் வகையில் தயாரித்து அனுப்பிய அறிக்கைக்கு இங்கிலாந்து அரசு உடனடியாக ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி சென்னை, வங்காளம், பம்பாய், மத்திய மாகாணங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டன. அதற்கான தேர்தலும் உடனடியாக அறிவிக்கப்பட்டது.