Home

Showing posts with label அணில். Show all posts
Showing posts with label அணில். Show all posts

Sunday, 15 August 2021

என் வாழ்வில் புத்தகங்கள் - புதிய புத்தகம்

 

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில் இருந்தது. தம் அடுக்ககத்தில் வசித்துவரும் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் வார ஞாயிறு அன்று மாலையில் ஒரு மணி நேரம் கதை கூறும் நிகழ்ச்சியை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். அடுத்தநாள் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நான் கதைசொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tuesday, 7 August 2018

மனக்குதிரையேறிச் செய்த பயணங்கள் – கட்டுரை


ஒன்றுமுதல் மூன்று வகுப்புகள் வரை நான் வளவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். நான்காம் வகுப்பையும்  ஐந்தாம் வகுப்பையும் கோவிந்தையர் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து முடித்தேன். ஆறு முதல் பதினோராம் வகுப்பு வரை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன்.