ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில் இருந்தது. தம் அடுக்ககத்தில் வசித்துவரும் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் வார ஞாயிறு அன்று மாலையில் ஒரு மணி நேரம் கதை கூறும் நிகழ்ச்சியை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். அடுத்தநாள் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நான் கதைசொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.