Home

Showing posts with label எஸ்ஸார்சி. Show all posts
Showing posts with label எஸ்ஸார்சி. Show all posts

Monday, 30 October 2023

அரிதான தருணங்கள் - புத்தக அறிமுகம்

  

புறநானூற்றுப் பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒரு சிறிய ஓவியம் என்றே குறிப்பிடலாம். ஓவியத்துக்கே உரிய தேர்ந்தெடுத்த அரிய காட்சிகளை அழகான சொல்லோவியங்களாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள் கவிஞர்கள். உறையூர் தாமோதரனார் என்பவரின் பாடலொன்றை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.  ஒன்றுக்குள் ஒன்றென இரு சித்திரங்களைக் கொண்ட பாடல் அது. ஒரு பெரிய சித்திரம். அதற்குள் ஒரு சின்னஞ்சிறு சித்திரம். ஓர் அண்மைக்காட்சி. ஒரு சேய்மைக்காட்சி.

Sunday, 30 July 2023

எஸ்ஸார்சியின் கதையுலகம் : ஆவணப்படுத்தும் கலை

  

அரிச்சந்திரன் கதையை அறியாதவர்களே இருக்கமுடியாதுஒரு பக்கத்தில், சத்தியத்தின் உறைவிடமாக இருக்கிறான் அரிச்சந்திரன். எதை இழந்தாலும் சத்தியத்தின் மீது தான் கொண்டிருக்கும் பற்றை அவன் துறப்பதில்லை. அதற்காக மலையளவு துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலையில் இருக்கிறான் . இன்னொரு பக்கத்தில் முனிவர் விசுவாமித்திரர் சத்தியத்தின் வழியிலிருந்து அவனை விலகவைக்க தொடர்ந்து முயற்சி செய்தபடி இருக்கிறார். அறத்தொடு நிற்றல் என்பது அரிச்சந்திரன் இயல்பாகவே இருப்பதால் அவருடைய முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியடைகின்றன. இரு விசைகளுக்குமிடையில் வெற்றி தோல்வி மோதல் இறுதிவரைக்கும் நீண்டுகொண்டே போகிறது.