புறநானூற்றுப் பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒரு சிறிய ஓவியம் என்றே குறிப்பிடலாம். ஓவியத்துக்கே உரிய தேர்ந்தெடுத்த அரிய காட்சிகளை அழகான சொல்லோவியங்களாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள் கவிஞர்கள். உறையூர் தாமோதரனார் என்பவரின் பாடலொன்றை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். ஒன்றுக்குள் ஒன்றென இரு சித்திரங்களைக் கொண்ட பாடல் அது. ஒரு பெரிய சித்திரம். அதற்குள் ஒரு சின்னஞ்சிறு சித்திரம். ஓர் அண்மைக்காட்சி. ஒரு சேய்மைக்காட்சி.