உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும் அவர் எழுதிய போரும் அமைதியும், அன்னா கரினினா, புத்துயிர்ப்பு போன்ற நாவல்கள் இன்றளவும் தொடர்ந்து புதிய வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.