Home

Showing posts with label சிறார் கதைகள். Show all posts
Showing posts with label சிறார் கதைகள். Show all posts

Sunday, 3 August 2025

அன்பை முன்வைக்கும் கதைகள்

 

உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும் அவர் எழுதிய போரும் அமைதியும், அன்னா கரினினா, புத்துயிர்ப்பு போன்ற நாவல்கள் இன்றளவும் தொடர்ந்து புதிய வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

Monday, 20 January 2025

மகிழ்ச்சியாக இருப்பதும் மகிழ்ச்சியாக வாழ்வதும்

 

ஒருசில நாட்களுக்கு முன்னால்தான் செந்தில் பாலா என்னும் கவிஞர் தொகுத்து வெளியிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுதியைப் படித்து மகிழ்ந்தேன். பல கவிதைகளின் வரிகள் இன்னும் என் நினைவலைகளில் மிதந்தபடி இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாகப் பெருக்கும் வகையில் இப்போது கும்பகோணம் பகுதியில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களின் கதைத்தொகுதியைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் இளம் வாசகர்வட்டத்தின் செயல்பாடுகள் மாணவர்கள் தம் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள பலவகைகளில் உதவியிருப்பதற்கு இதுபோன்ற தொகுதியே நல்ல எடுத்துக்காட்டு.

Sunday, 1 August 2021

புன்னகையும் பரவசமும்

 

காந்தியடிகள் தன் வாழ்க்கைவரலாற்றைசத்திய சோதனைஎன்னும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். அதில் அவர் தன் குழந்தைப்பருவத்தைப் பற்றி ஒருசில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். ஒருமுறை அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அரிச்சந்திரனின் வாய்மை தவறாத பண்பு அவரைக் கவர்ந்தது. சத்தியத்தின் மீது அரிச்சந்திரன் கொண்டிருக்கும் பற்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வழங்கிவிடுவதைப் பார்த்து அவர் வியப்படைந்தார். தன் வாழ்நாளில் சத்தியமே தனக்குரிய வழி என அக்கணத்தில் காந்தியடிகள் முடிவெடுத்தார்.