Home

Showing posts with label போக்கிடம். Show all posts
Showing posts with label போக்கிடம். Show all posts

Sunday, 19 June 2022

கலைக்கு ஓர் அர்த்தம்

 

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் வேலைவாய்ப்பின் காரணமாக சேலத்திலிருந்து சென்னையை நோக்கி வந்த தலைமுறையைச் சேர்ந்தவர் விட்டல்ராவ். ஆனால் வேலைக்கும் அப்பால் கலையிலக்கிய வான்வெளியில் சிறகடித்துப் பறக்கும் விழைவும் விசையும் அவர் மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால், ஒருபுறம் வேலை பார்த்தபடியே மறுபுறத்தில் அவர் ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். ஓவியம் அவருடைய விருப்பத்துக்குரிய கலைத்துறைகளில் முதன்மையானதாக இருந்தது.

Sunday, 25 July 2021

இரண்டு தளங்கள் - முன்னுரை

  

போக்கிடம் நாவல் 1976இல் இலக்கியச்சிந்தனை அமைப்பின் விருதுக்குரிய நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதன்முதலாக வெளிவந்தது. 1984இல் என் திருமணத்துக்கு வந்திருந்த இலக்கிய நண்பரொருவர் அந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். அப்போதுதான் அதை முதன்முதலாகப் படித்தேன். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாகப் படித்தேன்.