Home

Showing posts with label நதிமூலம். Show all posts
Showing posts with label நதிமூலம். Show all posts

Saturday, 8 October 2022

விட்டல்ராவின் படைப்புலகம்

 

அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கிய வெளியில் நாவல்கள், கட்டுரைகள் என பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் மூத்த படைப்பாளியான விட்டல்ராவ் அவர்களே. அவருடைய இலக்கியப் பங்களிப்பைக் கெளரவிக்கும் விதமாக இந்த ஒருநாள் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கும் விழாக்குழுவைச் சேர்ந்த நண்பர்களே. சிறுகதை, நாவல்கள், திரைப்படக்கட்டுரைகள், நுண்கலைசார் கட்டுரைகள் என விட்டல்ராவ் இயங்கிய வெவ்வேறு தளங்கள் சார்ந்து அவருடைய ஆளுமையை இன்றைய தலைமுறை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக ஆழமான கட்டுரைகளுடன் வந்திருக்கும் கருத்தரங்கப் பேச்சாளர்களே. சேலத்திலிருந்து மட்டுமன்றி, வெவ்வேறு நகரங்களிலிருந்து வந்து அவையில் நிறைந்திருக்கும் பார்வையாளர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Sunday, 19 June 2022

கலைக்கு ஓர் அர்த்தம்

 

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் வேலைவாய்ப்பின் காரணமாக சேலத்திலிருந்து சென்னையை நோக்கி வந்த தலைமுறையைச் சேர்ந்தவர் விட்டல்ராவ். ஆனால் வேலைக்கும் அப்பால் கலையிலக்கிய வான்வெளியில் சிறகடித்துப் பறக்கும் விழைவும் விசையும் அவர் மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால், ஒருபுறம் வேலை பார்த்தபடியே மறுபுறத்தில் அவர் ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். ஓவியம் அவருடைய விருப்பத்துக்குரிய கலைத்துறைகளில் முதன்மையானதாக இருந்தது.

Wednesday, 3 October 2018

ஒரு துளி நீர் - விட்டல் ராவின் ’நதிமூலம்’



கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். பள்ளம் கண்ட இடத்தில் பாய்ச்சல். வளைந்து திரும்பும் தருணங்களில் முரட்டுத்தனம். அக்கிரகாரத்தில் கிட்டா ஓர் அதிசயப்பிறவி. நாவலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி அவருடைய மன அமைப்பைப் புலப்படுத்தும் தன்மையில் உள்ளது. தீண்டாமை உச்சத்தில் இருந்த முப்பதுகளில், குளத்தில் விழுந்துவிட்ட சிங்காரவேலுப்பிள்ளையின் மனைவியைக் காப்பாற்ற ஒருவர்கூட முன்வரவில்லை. குளிக்கவும் தண்ணீர் எடுக்கவும் சென்ற பெண்கள் கரையில் நின்று சத்தம் போடுகிறார்கள். அத்தருணத்தில் தெருவில்  நடமாடிக்கொண்டிருந்த எல்லாச் சாதி ஆண்களும் அக்காட்சியைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள்