Home

Showing posts with label பேசும் புதிய சக்த. Show all posts
Showing posts with label பேசும் புதிய சக்த. Show all posts

Monday, 12 July 2021

திருநீறு பூசிய முகம் - கட்டுரை

 

இரண்டு ஊர்களுக்கிடையிலான கேபிள் பாதையை நாம் நினைத்த நேரத்தில் தொடங்கிவிட முடியாது. அதற்கு முன்பு செய்துமுடிக்க வேண்டிய சில வேலைகள் உண்டு. பெரும்பாலும் சாலையை ஒட்டியே கேபிள் பாதை அமைவதால், சாலைத்துறையினரை அணுகி வேலையைத் தொடங்குவதற்குரிய அனுமதியைப் பெறவேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, கிராம பஞ்சாயத்து நிர்வாகம் என பல்வேறு வகையான நிர்வாகங்களின் கீழ் சாலை பிரிந்திருக்கும். ஒவ்வொரு நிர்வாகத்தின் எல்லைக்குள் அடங்கிய பாதையின் நீள விவரங்கள் அடங்கிய குறிப்புகளோடு அவர்களை அணுகினால் மட்டுமே அதைப் பெறமுடியும். அதற்குப் பிறகு  வாகனங்களின் தினசரி இயக்கத்துக்கு இசைவாக எரிபொருளை கடனுக்கு வழங்கும் நிலையத்தை முடிவு செய்யவேண்டும். எல்லாவற்றையும் விட பள்ளம் தோண்டுவதற்குத் தேவையான ஊழியர்களைத் திரட்டுவது முக்கியமான வேலை.

Wednesday, 25 November 2020

காற்றினிலே வரும் கீதம் - கட்டுரை


இரவு மணி பதினொன்று. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி மேசைமீது வைத்துவிட்டு எழுந்தேன். படுக்கச் செல்வதற்கு முன்னால் வாசல் கதவில் தொடங்கி பின்கட்டுக் கதவு வரைக்கும் ஒவ்வொன்றையும் சரியாக சாத்தியிருக்கிறார்களா, தண்ணீர்க்குழாய்களை மூடியிருக்கிறார்களா என ஒருமுறை பார்த்துவிட்டு வருவது என் பழக்கம். நேற்றும் அப்படித்தான் பார்த்துக்கொண்டே சென்றேன். சமையல்கட்டு ஜன்னல் கதவுகள் இரண்டும் திறந்திருந்தன. அருகில் சென்று மூடுவதற்காக கைநீட்டி ஜன்னல் கதவை இழுத்தபோது வானத்தில் நிலா தெரிந்தது.