Home

Showing posts with label காற்றினிலே வரும் கீதம். Show all posts
Showing posts with label காற்றினிலே வரும் கீதம். Show all posts

Wednesday, 25 November 2020

காற்றினிலே வரும் கீதம் - கட்டுரை


இரவு மணி பதினொன்று. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி மேசைமீது வைத்துவிட்டு எழுந்தேன். படுக்கச் செல்வதற்கு முன்னால் வாசல் கதவில் தொடங்கி பின்கட்டுக் கதவு வரைக்கும் ஒவ்வொன்றையும் சரியாக சாத்தியிருக்கிறார்களா, தண்ணீர்க்குழாய்களை மூடியிருக்கிறார்களா என ஒருமுறை பார்த்துவிட்டு வருவது என் பழக்கம். நேற்றும் அப்படித்தான் பார்த்துக்கொண்டே சென்றேன். சமையல்கட்டு ஜன்னல் கதவுகள் இரண்டும் திறந்திருந்தன. அருகில் சென்று மூடுவதற்காக கைநீட்டி ஜன்னல் கதவை இழுத்தபோது வானத்தில் நிலா தெரிந்தது.