மாநிலம் தாண்டி மாநிலம் செல்கிற ரயிலில் நிம்மதியுடன் மிக சமீபத்தில் உறங்கும் புதிய மனைவியின் முகப் பிரகாசத்தையும் காற்றில் நெளிந்துநெளிந்து அலைகிற அவள் கூந்தலையும் பார்த்தபடி ஊரில் நடந்ததையெல்லாம் ஒன்றுமாற்றி ஒன்று யோசித்தபோது செவிடி என்கிற தளர்ந்த அந்தக் கிழவியின் ஞாபகம் வந்தது.