ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக நிறுத்தப்பட்டு பூமியைத் துளைத்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். ”அங்க ஒரு அடிபம்ப் வைக்கப்போறாங்கடா” என்று சொன்னான் நெடுஞ்செழியன்.