Home

Saturday 13 July 2019

பிறந்த ஊர் நினைவு - கவிதை




நரம்புச் சுள்ளிகளில் பொறி விழுந்து
பற்றி எரிகிறது ஞாபகம்
ஆயிரம் முகம் கலங்க
அலையும் நெருப்பினிடையே
அசைகிறது அந்தச் சித்திரம்

ஒளிப்பிழம்பின் சரிவுகளில்
புகை வெளியில்
உள்ளொடுங்கி நீள்கிறது என் தெரு
கிளறிக் கிளறி மீளும் நெஞ்சு
கரிந்த சாம்பலில்
எதையோ தேடித் தவிக்கிறது
தாய் முதுகில்
ஆனை ஏறி ஆடிய தாழ்வாரம்
தட்டுப்படாமல் மறைந்துவிட
பறிகொடுத்த சோர்வோடு
பித்தாகித் திரிகின்றேன்
அந்நிய நகரில் படுத்துறங்கி
அலையும் வாழ்க்கை நகர்கிறது .

(கணையாழி, ஜூலை 1993)