என் மனைவியின் தங்கை
குடும்பம் வேலூரில் இருந்தது. அவர்களுக்கும் அங்கிருந்த ஒரு சித்த
மருத்துவருக்கும் நல்ல பழக்கம். அவரைப்பற்றி ஒவ்வொருமுறையும் தொலைபேசியில் அவர்கள்
சொன்ன தகவல்கள் அவரைச் சந்திக்கும் ஆர்வத்தைத் து¡ண்டியது. தொடர்ச்சியான பல அலுவலகப் பயணங்களாலும் வேலைச்சுமைகளாலும் வேலு¡ருக்குத் திட்டமிட்டிருந்த பயணம் தள்ளித்தள்ளிப் போனது. வருகிறேன் என்று சொன்ன
தேதிக்கு மாறாக மூன்று மாதம் கழித்துத்தான் செல்லமுடிந்தது. நான் சென்ற நேரத்தில்
மருத்துவர் ஊரில் இல்லை. அருகிலிருந்த ஏதோ ஒரு கிராமத்தில் நோயாளிகளைக்
காண்பதற்காகச் சென்றிருப்பதாகவும் அன்று இரவு அல்லது மறுநாள் காலையில்
வந்துவிடுவாரென்றும் தொலைபேசியில்
சொன்னார்கள்.