வடமாநிலங்களில் கதர்ப்பிரச்சாரப் பயணத்தை முடித்துக்கொண்டு தென்னகத்துக்கு வந்த காந்தியடிகள் கர்நாடகம் வழியாக தமிழகத்துக்குள் வந்தார். ஒசூர், கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் வழியாகச் சென்னைக்குச் சென்று, பிறகு அங்கிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து 10.09.1927 அன்று அதிகாலை 03.30 மணியளவில் கடலூருக்கு வந்துசேர்ந்தார். நகராட்சி மன்ற உறுப்பினர்கள் காந்தியடிகளை வரவேற்று அழைத்துச் சென்றனர். முதலில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பங்களாவிலும் பிறகு திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த முத்தையா செட்டியாரின் இல்லத்திலும் காந்தியடிகள் தங்கி ஓய்வெடுத்தார்.