தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு காந்தியடிகள் வருவதற்கு அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே பீகாரைச் சேர்ந்த சம்பாரணில் அவுரி சாகுபடியின் விளைவாக விவசாயிகளின் வாழ்வில் துயரம் கவியத் தொடங்கிவிட்டது. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய அவுரிச் சாகுபடி விவசாயிகளின் வாழ்க்கையை சிறுகச்சிறுகச் சிதைத்து வதைத்தது.