Home

Showing posts with label இரா.நடராசன். Show all posts
Showing posts with label இரா.நடராசன். Show all posts

Monday, 1 January 2024

கதைசொல்லத் தூண்டும் கதைகள்

  

சில ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். இரவு உணவு முடிந்த பிறகு எல்லோரும் மண்டபத்திலேயே தங்கிவிட்டோம்.

பெரியவர்கள் அனைவரும் ஒரு பக்கமாக அமர்ந்து பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். ஐந்து வயது முதல் பத்து வயது வரைக்குமான சிறுவர்களும் சிறுமிகளும் வேறொரு பக்கத்தில் கூடி விளையாடிக்கொண்டிருந்தனர். எல்லாமே அரங்குக்குள்ளே ஆட முடிந்த சின்னச்சின்ன விளையாட்டுகள். கண்ணாமூச்சி. கல்லா மண்ணா. சாபூத்ரி. உப்புமூட்டை.