மலையாள இலக்கிய உலகத்தில் மாபெரும் படைப்பாளியாக கருதப்படுகிற வைக்கம் முகம்மது பஷீரின் தோற்றம் முதல் மறைவுவரைக்குமான வாழ்க்கை வரலாறு பத்தொன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காலம் முழுதும் கலை என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இருபதாவது பகுதியாக, என் மரணக்குறிப்பு என்கிற தலைப்பில் பஷீர் இறுதியாக எழுதிய கட்டுரைக்குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இதை எழுதியவர் இ.எம்.அஷ்ரப். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குறிஞ்சிவேலன்.