ஏறத்தாழ நூற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கல்கத்தாவில் நகரத்துக்குள் நான்கு வீடுகளும் புறநகரில் தோட்டத்துடன் கூடிய மாளிகை போன்றதொரு வீடும் வைத்திருந்த செல்வச்செழிப்பான உயர்வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞரின் குடும்பமொன்றில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் பத்து வயதாக இருந்தபோது, இரண்டாவது பிரசவத்தில் அவளுடைய அன்னை மறைந்துவிட்டாள். அந்தத் துக்கத்தின் நிழல் அவள் மீது விழுந்துவிடாதபடி, அவளை கண்ணும் கருத்துமாக வளர்த்தார் அவளுடைய தந்தையார். நகரத்திலேயே பெரிய பள்ளியாக இருந்த பெத்யூன் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார்.