Home

Showing posts with label கத்தி. Show all posts
Showing posts with label கத்தி. Show all posts

Sunday, 22 September 2024

கத்தி - 1


தனியாக நடப்பதில் ரொம்பவும் சந்தோஷமாய் இருந்தது சிவகாமிக்கு. அம்மா வந்தால் எப்போதும் தொந்தரவுதான். வீட்டில் ஆரம்பித்து வேலங்காடு சேர்கிறவரைக்கும் திட்டிக்கொண்டே வருவாள். தினம்தினமும் திட்டு வாங்கி அம்மா கூட விறகு வெட்டப் போவது என்றாலே சலிப்பு தருகிற விஷயமாகிவிட்டது

கத்தி - 2

 

-இரண்டு-

அம்மா வீட்டிலும் இல்லை, நவநீதம் அக்கா வீட்டிலும் இல்லை. தேடிப் பார்த்து மறுபடியும் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்தாள் சிவகாமி.

அழுகை இன்னும் நின்றபாடில்லை. ஒவ்வொரு நிமிஷமும் பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. கத்தியைத் தொலைத்து விட்டு வெறும் கையோடு வந்து நிற்கும் தன்னை அம்மா நிச்சயம் நொறுக்கிவிடுவாள் என்று நினைத்தாள். வெட்டிப் பலி குடுத்துருவன் என்று திட்டும்போது அம்மா உபயோகப்படுத்துகிற வார்த்தை மாதிரி ஏதோ ஒன்று இன்றைக்கு நிகழப்போகிறது என்ற நினைப்பு மேலும்மேலும் பயம் தருவதாய் இருந்தது. கொஞ்ச நேரத்தில் முகம் வெளுத்து விட்டது. அழுகையை நிறுத்தினாலும் வேதனை தாங்கமுடியாததாக இருந்தது.