Home

Showing posts with label கன்னடக்கவிதைகள். Show all posts
Showing posts with label கன்னடக்கவிதைகள். Show all posts

Wednesday, 3 May 2017

எச்.எஸ்.சிவப்பிரகாஷின் ஐந்து கன்னடக் கவிதைகள்



1.இரவு முழுதும்

இரவு முழுதும்
ஓவென்ற காற்றின் ஊளை
உடல்மீது பாய்வதுபோல இருந்தது
இந்நேரம்
சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம்
என் வாடகை வீடு

பகல் முழுதும்
பொழிந்தபடியே இருந்தது
மழைமழைமழை
இந்நேரம்
கரைந்துபோயிருக்கலாம்
என் வாடகை வீடு