அருணாசலக் கவுண்டரின் வம்சம் உருத்தெரியாமல் சுக்கு நூறாகச் சிதைந்து மண்ணாகிவிட்டது. ஏதோ சாபத்தின் விளைவு என்றுதான் பேச்சு. கையில் ஒரு பிள்ளையும் இடுப்பில் இன்னொரு பிள்ளையுமாய் பிச்சை கேட்டு வந்த யாரோ ஒரு கர்ப்பிணிப் பெண் பசிக்குச் சோறு போடாத கல் வீட்டைப் பார்த்து வயிறெரிய “மண்ணோடு மண்ணாகப் போகட்டும்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.