எங்கள் வீட்டருகே நாக்பூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் குடியிருந்தான். கணிப்பொறித்துறையில் ஓராண்டு விசேஷ பயிற்சிக்காக வந்து தங்கியிருந்தான். அடுத்த ஆண்டிலேயே அவனுக்கு வேலை கிடைத்தது. அதற்கடுத்த ஆண்டில் அவன் திருமணம் செய்துகொண்டான். தன் அறைக்குப் பக்கத்திலேயே அதே வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். அடுத்த ஆண்டில் அவர்கள் வீட்டில் குழந்தையின் மழலைச் சத்தம் கேட்டது. இந்திமொழியில் அவர்கள் அக்குழந்தையைக் கொஞ்சிக்கொஞ்சிப் பாடுவதையும் பேசுவதையும் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருப்பேன். தளர்நடைபோட்டு அக்குழந்தை வாசலுக்கு வெளியே வரத் தொடங்கியதும் காலைநடைக்கு அக்குழந்தையையும் ஒரு தள்ளுவண்டியில் உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு வருவான் அந்த இளைஞன். அந்தக் குழந்தைக்கு சோறு ஊட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு வேளையிலும் ஒரு மணிநேரம் பிடிக்கும். சலிப்பே இல்லாமல் அவர்கள் இருவரும் அக்குழந்தையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருப்பார்கள்.
Showing posts with label கருப்பு நாய். Show all posts
Showing posts with label கருப்பு நாய். Show all posts
Saturday, 21 October 2017
பெற்ற மனம்- சிபிச்செல்வனின் "அரும்பின் குறும்பு"
எங்கள் வீட்டருகே நாக்பூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் குடியிருந்தான். கணிப்பொறித்துறையில் ஓராண்டு விசேஷ பயிற்சிக்காக வந்து தங்கியிருந்தான். அடுத்த ஆண்டிலேயே அவனுக்கு வேலை கிடைத்தது. அதற்கடுத்த ஆண்டில் அவன் திருமணம் செய்துகொண்டான். தன் அறைக்குப் பக்கத்திலேயே அதே வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். அடுத்த ஆண்டில் அவர்கள் வீட்டில் குழந்தையின் மழலைச் சத்தம் கேட்டது. இந்திமொழியில் அவர்கள் அக்குழந்தையைக் கொஞ்சிக்கொஞ்சிப் பாடுவதையும் பேசுவதையும் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருப்பேன். தளர்நடைபோட்டு அக்குழந்தை வாசலுக்கு வெளியே வரத் தொடங்கியதும் காலைநடைக்கு அக்குழந்தையையும் ஒரு தள்ளுவண்டியில் உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு வருவான் அந்த இளைஞன். அந்தக் குழந்தைக்கு சோறு ஊட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு வேளையிலும் ஒரு மணிநேரம் பிடிக்கும். சலிப்பே இல்லாமல் அவர்கள் இருவரும் அக்குழந்தையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருப்பார்கள்.
Subscribe to:
Posts (Atom)