சின்ன வயதில் கதைப்புத்தகங்களைத் தேடித்தேடி படிப்பதில் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அப்போது படித்த கதைகளில் ஒன்று இன்னும் என் நினைவில் உள்ளது. அதன் பெயர் நவரத்தின மலை. அது செங்குத்தான மலை. மேலேயிருந்து தட்டுத்தடுமாறி கீழே இறங்கிவிட முடியுமே தவிர, மேலே ஏறிச் செல்ல வழியில்லை. அதன் உச்சியில் அழகானதொரு தோட்டம் இருப்பதாகவும் அங்கே பூக்கும் பூக்கள் ஒருபோதும் வாடாதவை என்றும் பேசிக்கொள்கிறார்கள்.