Home

Showing posts with label சிவப்புக்கல் மோதிரம். Show all posts
Showing posts with label சிவப்புக்கல் மோதிரம். Show all posts

Sunday, 4 June 2023

சிவப்புக்கல் மோதிரம் - சிறுகதை

 

”இன்னைக்கு என்ன, பூமழையா? இப்பிடி ஏராளமா பூ உழுந்து கெடக்குது”

இரண்டுசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவைத் திறக்கிறவரைக்கும் தமிழிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்னும் குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால் சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் சுவருக்கும் வீட்டு வாசலுக்கும் நடுவில் நின்றிருக்கும் மகிழமரத்தடியில் விழுந்து கிடக்கும் பழைய பூக்களின் குவியல்மீது உதிர்ந்திருக்கும் புதிய பூக்களைப் பார்த்ததும் உரையாடலுக்கு ஒரு தொடக்கம் கிடைத்துவிட்ட வேகத்தில்தான் அப்படிக் கேட்டேன்.   ஆனால் மறுகணமே அந்த வேகம் வடிந்துவிட்டது.

Sunday, 2 June 2019

மாபெரும் கனவு - கட்டுரை



சின்ன வயதில் கதைப்புத்தகங்களைத் தேடித்தேடி படிப்பதில் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அப்போது படித்த கதைகளில் ஒன்று இன்னும் என் நினைவில் உள்ளது. அதன் பெயர் நவரத்தின மலை. அது செங்குத்தான மலை. மேலேயிருந்து தட்டுத்தடுமாறி கீழே இறங்கிவிட முடியுமே தவிர, மேலே ஏறிச் செல்ல வழியில்லை. அதன் உச்சியில் அழகானதொரு தோட்டம் இருப்பதாகவும் அங்கே பூக்கும் பூக்கள் ஒருபோதும் வாடாதவை என்றும்  பேசிக்கொள்கிறார்கள்.