மலையாள மொழியின் முக்கியக் கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மிக இளம் வயதிலேயே தம் கவிதைகளால் மலையாள உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டவர். கவிதைகள் அரங்கேறும் அரங்குகளை தம் வசீகரமான குரலால் வசப்படுத்திக் கொண்டவர். அரசியல் சார்பின் காரணமாக பதினெட்டு வயதிலேயே பெற்ற தந்தையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர். அதைத் தொடர்ந்து வாழ்க்கையில் தமக்குக் கிடைத்த அனுபவங்களில் சிலவற்றைப் பதிவு செய்த அவரது மலையாள நுால் கே.வி.ஷைலஜாவால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.