வாரத்துக்கு ஏழு நாட்கள் என்கிற கணக்கு ரொம்பவும் அனாவசியம் என்பதுதான் துரைசாமி நாயக்கரின் எண்ணம். சிற்சில சமயங்களில் ஒருவார காலம் என்பது முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே இருப்பது மாதிரியும் யாரோ ஒருவர் வேண்டுமென்ற சதி செய்து ஓடுகிற ஒன்றை இழுத்துக் கட்டிப்போட்டு நத்தை வேகத்தில் உருட்டி விடுகிற மாதிரியும் தோன்றும். ஒரு நாள் கழிவது ஒரு யுகம் கழிகிற சிரமமாய் இருக்கும். இல்லை இல்லை. அது கூட தப்பு என்பதே நாயக்கரின் அபிப்பராயம். சாட்சிக் கையெழுத்துக்கு எவனாச்சும் கூப்பிடமாட்டானா என்று ரெஜிஸ்டர் ஆபீஸ் படிகளில் ஏறுகிற இறங்குகிற முகங்களை எல்லாம் கண்கொட்டாது பார்க்கிற தனக்கு ஒரு மணி நேரம் கழிவதே ஒரு யுகம் கழிவது போல என்பதுதான் சரியான வசனம் என்று சொல்வார்.
Showing posts with label சாட்சி. Show all posts
Showing posts with label சாட்சி. Show all posts
Friday, 31 March 2023
Sunday, 17 October 2021
சாட்சி - சிறுகதை
பெங்களூர்க்கு மாற்றலாகிப் போகிறேன் என்றதும் ‘அவசியமா எம்.ஜி.ரோட்டப் போய்ப் பாரு’ என்றான் சினேகிதன். ‘என்னடா விசேஷம்?’ என்றதற்கு ‘பாத்தா நீயே புரிஞ்சிக்குவ’ என்றான். சொன்னதெல்லாம் வாஸ்தவம்தான் என்று வந்தபிறகு புரிந்தது.
Labels:
சாட்சி,
பாவண்ணன் சிறுகதை,
மன ஓச
Subscribe to:
Posts (Atom)