1857 ஆம் ஆண்டு, இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டம். அந்த
ஆண்டில்தான் ஆங்கிலேயரின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்தும் ராணுவத்துறையில் ஆங்கில அரசாங்கம் அறிமுகப்படுத்திய நடைமுறைகளை வெறுத்தும் இந்தியச் சிப்பாய்களிடையே ஒரு பேரெழுச்சி உருவானது. அந்த எழுச்சி ஆட்சியில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது. கிளர்ச்சியைத் தொடர்ந்து தில்லியைக் கைப்பற்றி, தன்னை அரசராக அறிவித்துக்கொண்டவர் நானா சாகிப்.