Home

Showing posts with label சிறுவர் பாடல்கள் தொகுப்பு. Show all posts
Showing posts with label சிறுவர் பாடல்கள் தொகுப்பு. Show all posts

Thursday, 15 January 2015

‘யானைச் சவாரி’ தொகுப்பிலிருந்து சில பாடல்கள்




1.குறும்புக்காரி

ஆட்டக்காரி பாட்டுக்காரி
ஆடி வருகிறாள்
அக்கம்பக்கம் பொருளையெல்லாம்
தள்ளி வருகிறாள்

குறும்புக்கார் சிரிப்புக்காரி
குதித்து வருகிறாள்
அழுக்குக் கையை நல்ல துணியில்
துடைத்துச் சிரிக்கிறாள்

பேச்சுக்காரி தளுக்குக்காரி
ஓடி வருகிறாள்
அம்மா தரும் பாலை மட்டும்
அருந்த மறுக்கிறாள்

வம்புக்காரி வார்த்தைக்காரி
வளைய வருகிறாள்
அங்குமிங்கும் போக்குக்காட்டி
தப்பி விடுகிறாள்

‘யானை சவாரி’ பாடல் தொகுதிக்கு எழுதிய முன்னுரை



எங்கள் வீட்டுக்கு அருகில் நான்கு பூங்காக்கள் இருக்கின்றன. செவ்வக வடிவம் கொண்ட பூங்காவின் விளிம்பையொட்டி போடப்பட்டிருக்கும்  அகலமான பாதை நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு உரியது. ஒரு சுற்று என்பது ஏறத்தாழ நானூறு மீட்டர் நீளமிருக்கும். பாதைக்கு இடைப்பட்ட பகுதி முழுக்க புல்வெளியாலும் பூச்செடிகளாலும் நிறைந்திருக்கும். இடையிடையே சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடுவதற்கான ஊஞ்சல்களும் சறுக்குமரங்களும் ஏறி இறங்கும் ஏணிகளும் வளைந்து நெளிந்து போகும் வாயகன்ற குழாய்களும் பொருத்தப்பட்டிருக்கும். மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் ஏராளமான பிள்ளைகள் பெற்றோர்களின் துணையுடன் இங்கே வந்து விளையாடுவார்கள். சற்றே வளர்ந்த பிள்ளைகள் பந்து விளையாடுவார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். ஒரே சமயத்தில் நாற்பது ஐம்பது பிள்ளைகள் விளையாடமுடியும். நடைப்பயிற்சி முடிந்த பிறகு, ஒரு மரத்தடியிலோ அல்லது சிமெண்ட் பெஞ்சிலோ உட்கார்ந்துகொண்டு அச்சிறுவர்களின் விளையாட்டுகளை நேரம் போவதே தெரியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மாலை நேரங்களில் எனக்குள் பரவும் உற்சாகத்துக்கு ஈடு இணையே இல்லை.

யானை சவாரி – சிறுவர் பாடல்கள் தொகுப்பு



கடந்த மூன்றாண்டுகளாக அவ்வப்போது நான் எழுதிய சிறுவர் பாடல்கள்யானை சவாரிஎன்னும் தலைப்பில் புதியதொரு தொகுப்பாக இப்போது வெளிவந்துள்ளது. ஒவ்வொரு பாட்டுக்கும் அழகான ஒரு கோட்டோவியத்தை ஓவியர் ராமமூர்த்தி வரைந்தளித்துள்ளார். இந்த ஓவியங்கள் தொகுப்புக்கு அழகைச் சேர்க்கின்றன. இந்தத் தொகுதியில் 64 பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில  பிரசுரமானவை. பெரும்பாலான பாடல்கள் பிரசுரமாகாதவை.