Home

Showing posts with label சுந்தரவரதன். Show all posts
Showing posts with label சுந்தரவரதன். Show all posts

Tuesday, 9 January 2024

சுந்தரவரதன் : வினைத்திட்பமும் மனத்திட்பமும்

 

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை 01.08.1920 அன்று தொடங்கினார். பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் துறந்துவிட வேண்டும், ஊதியம் பெறும் அரசாங்கப் பதவிகளையும் துறந்துவிடவேண்டும், காவல் துறையிலிருந்தும் இராணுவத் துறையிலிருந்தும் விலகவேண்டும், வரி கொடுப்பதை நிறுத்தவேண்டும் ஆகிய நான்கு முக்கியமான அம்சங்கள் அத்திட்டத்தில் இருந்தன.