காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை 01.08.1920 அன்று தொடங்கினார். பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும் துறந்துவிட வேண்டும், ஊதியம் பெறும் அரசாங்கப் பதவிகளையும் துறந்துவிடவேண்டும், காவல் துறையிலிருந்தும் இராணுவத் துறையிலிருந்தும் விலகவேண்டும், வரி கொடுப்பதை நிறுத்தவேண்டும் ஆகிய நான்கு முக்கியமான அம்சங்கள் அத்திட்டத்தில் இருந்தன.