தமிழிலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவருக்கு, ஒருமுறை இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை எனப்படும் இலக்கணக்குறிப்பைச் சார்ந்து ஓர் ஐயம் ஏற்பட்டது. சென்னையில் அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த பல புலவர்களையும் அவர் அணுகி விசாரித்தார். அவருடைய ஐயத்தை அகற்றும் விதமாக ஒருவராலும் விடை சொல்லமுடியவில்லை.