நேற்றுவரை நம்முடன் வாழ்ந்து இன்று அமரராகிப் போன பரிமளாதேவியைப்பற்றிச் சொல்ல ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு என்னிடம் விஷயங்கள் உண்டு. அவை அனைத்தையும் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் முன்வைப்பது பொருத்தமான செயலாக இருக்காது. அதே சமயத்தில் அவரைப் பற்றிய கச்சிதமான சித்திரத்தையாவது உங்கள் முன் தீட்டிக் காட்டாவிடில் பரிமளாதேவிக்குச் செலுத்தும் எனது அஞ்சலிப் பேச்சு முழுமையான ஒன்றாக அமைய வாய்ப்பில்லை.