விட்டல்ராவின் ”நவீன கன்னட சினிமா”
எழுபதுகளில் வெளியான ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தோடு
புதிய அலைவீச்சைக் கொண்ட கன்னட மொழித் திரைப்படங்கள்
வெளிவரத் தொடங்கின என்பது ஒரு வரலாற்று உண்மை. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
பல முக்கியமான ஆளுமைகளை நவீன கன்னடத் திரைப்பட உலகம் இந்தியாவுக்கு அளித்துள்ளது. கிரீஷ்
கார்னாட், எம்.எஸ்.சத்யு, ஜி.வி.ஐயர், நாக் சகோதரர்கள், பி.வி.காரந்த், பட்டாபி ராம
ரெட்டி, புட்டண்ண கனகல், கிரீஷ் காசரவள்ளி என சுருக்கமான ஒரு பட்டியலை நமக்கு வழங்குகிறார்
விட்டல்ராவ்.