தமிழ்ச்சூழலில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும்
மேலாக மரபுப்பாவலராக ஊக்கமுடன் இயங்கிவரும் தங்கப்பா தொடக்கக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்கான
பாடல்களையும் எழுதி வருகிறார். எங்கள் வீட்டுச்
சேய்கள் அவருடைய தொடக்கக் காலத்தொகுதிகளில் மிகமுக்கியமானது. குழந்தையோடு குழந்தையாக
வாழ்ந்த அனுபவங்களை அத்தொகுதியில் நாம் காணலாம்.