Home

Showing posts with label பொய்த்தேவு. Show all posts
Showing posts with label பொய்த்தேவு. Show all posts

Saturday, 2 November 2019

நாவல் என்னும் பேருலகம்- ஒன்பதாம் விக்கிரகத்தைத் தேடி - முதல் பகுதி


  
                            -1-
     பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் எழுதப்பட்ட ருஷ்ய, ஐரோப்பிய நாவல்களின் வருகைக்குப் பிறகு நாவல் என்னும் இலக்கிய வடிவம் சார்ந்த ஆவல் உலகத்தில் எல்லா மொழிகளிலும் உருவானதைப்போலவே தமிழ்ப்படைப்பாளிகளிடமும் பிறந்தது. அத்தருணம் வரையிலும் கவிதைத்துறையின் பாடுபொருளாக இருந்த அம்சங்கள் மெல்லமெல்ல நாவல்களின் பாடுபொருளாக மாற்றமடையத் தொடங்கியது. வெண்பாக்களிலும் விருத்தங்களிலும் பாடப்பட்டுவந்த நீதிக்கருத்துகளும் அறநெறிக்கருத்துகளும் உரைநடையின் தளத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தன.