1968இல் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நாற்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டபோது, அந்த நிகழ்ச்சியைக் கண்டித்து ஏராளமான படைப்புகள் எழுதப்பட்டன. அவற்றில் ஞானக்கூத்தன் எழுதிய கவிதையொன்று மிகமுக்கியமானது.