Home

Showing posts with label மருதன். Show all posts
Showing posts with label மருதன். Show all posts

Sunday, 17 November 2024

இனிய சொற்சித்திரங்கள்

 

’அன்பால் என்ன செய்யமுடியும் என்னும் கேள்விக்கு, அன்பால் செய்யமுடியாதது என ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா என்னும்  இன்னொரு கேள்வியே விடை. அன்பு எதையும் எதிலிருந்தும் எதற்காகவும் பிரியாது. நான் இதைக் கொடுத்தால் நீ என்ன கொடுப்பாய் என அன்புக்கு பேரம் பேசவும் தெரியாது. நான் கொடுக்கிறேன், நீ பெற்றுக்கொள் என பெருமை பேசும் பழக்கமும் அன்புக்கு இல்லை. யாரும் பார்க்காவிட்டாலும் யாரும் ரசிக்காவிட்டாலும் யாரும் கேட்காவிட்டாலும் பெய்துகொண்டே இருக்கும் மழையைப் போன்றது அது’