குட்டை குட்டையாய் காட்டாமணக்குச் செடிகளும்
நுனியில் சாணம் அதக்கி நட்டிருக்கிற நாலு
முருங்கைக்கன்றுகளும் இருக்கிற வரிசைதான் மீரா வீட்டு
வேலி. வேலிக்கு இந்தப் பக்கத்தில் மாட்டுக் கொட்டகையோரம்
சாணம் மிதித்துக் கொண்டிருந்தாள் மீரா.