சிற்றிலக்கியப் புலவரொருவர் ஒருமுறை செவ்வூர் என்னும் ஊருக்குச் சென்றார். நெடுந்தொலைவு நடந்தே வந்ததால் அவருக்கு பசிக்கத் தொடங்கிவிட்டது. பெருமூச்சுடன் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். அந்த வீட்டில் ஏராளமானவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் திண்ணையின் பக்கம் திரும்பி அவரைப் பார்த்தபடி சென்றார்களே தவிர, ஒருவர் கூட அவருக்குப் பக்கத்தில் வந்து விசாரிக்கவில்லை. ஒரு வாய்வார்த்தையாகக்கூட சாப்பிடுகிறீர்களா என்று ஒருவரும் கேட்கவில்லை. அச்சூழலைக் கண்டு மிகவும் மனம் புண்பட்ட புலவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடியே எரிச்சலில் ஒரு வெண்பாவைப் பாடினார்.