கைப்பேசியில் மணியொலித்தது. சாரதாவின்
அழைப்புக்காகவே உருவாக்கப்பட்ட இசைக்கோவை.
எடுத்து காதில் வைத்ததுமே
“எப்படி இருக்கிங்க? பிரயாகைலாம்
எப்படி இருக்குது?” என்றாள்.
பதில் சொல்லி முடித்ததும்
அந்தப் பக்கத்திலிருந்து நாக்கை
சப்புக்கொட்டும் சத்தம்
கேட்டது. “நீங்க கெளம்பிப்
போயி இன்னியோட ஏழு
நாளாயிட்டுது. இன்னும்
எட்டு நாளை ஓட்டணும்.
இப்பவே எங்க எங்கன்னு
ரெண்டு கண்ணும் தேடுது”
என்று சிணுங்கலோடு சொல்வதும்
கேட்டது. சட்டென நான்
பேச்சின் திசையை மாற்றி
“சந்திரா எப்படி இருக்கா?
பிடிவாதம் பிடிக்காம ஸ்கூல்
போறாளா?” என்று கேள்விகளை
அடுக்கினேன்.