Home

Showing posts with label மோகனரங்கன். Show all posts
Showing posts with label மோகனரங்கன். Show all posts

Wednesday, 23 August 2017

என்றென்றும் மாறாத பொருத்தமின்மை- மோகனரங்கனின் "கைக்கிளை"


வித்யாரண்யபுர என்பது பெங்களூர் மாநகரத்தின் ஒரு நுனி. ஜெயநகர் என்பது இன்னொரு நுனி. கிட்டத்தட்ட முப்பது கிலோமீட்டர் இடைவெளி. நகரப் பேருந்தில் பிரயாணக்கணக்கு ஏறத்தாழ இரண்டரைமணிநேரம். அலுவலகத்துக்கு வந்து செல்வதிலேயே ஒரு நாளில் ஐந்துமணிநேரம் செலவாகிவிடும். என் நண்பரொருவர் தினமும் அப்படித்தான் அலுப்பில்லாமல் வந்துகொண்டிருந்தார். என்னைவிட வயதில் இளையவர். "அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே ஏதாவது வீடு பார்க்கக்கூடாதா?" என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். "பாக்கலாம், ஆனா அவங்க வரமாட்டாங்க..." என்று புன்னகைத்தார். "அவங்க" என்று அவர் சொன்னது அவர் மனைவியையும் பிள்ளையையும். ஏன் என்று கேட்டேன். "அங்க அவுங்க அம்மாஅப்பா வீடு பக்கத்தலயே இருக்குது, அதான்" என்றார்.