சில நாட்களுக்கு முன்பு நண்பரொருவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். கூடத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது பின்கட்டிலிருந்து பலாப்பழத்தின் இனிய மணம் வந்தது. “என்ன, பலாப்பழத்து வாசனை போல இருக்குதே? வாங்கிவந்தீங்களா? எங்க கிடைச்சது?” என்று கேட்டேன். “நான் வாங்கிவரலை. நேத்து ஊருலேர்ந்து அத்தை வந்தாங்க. அவுங்க வாங்கிட்டு வந்த பழம். அவுங்கதான் அறுத்து சுளை எடுக்கறாங்க” என்றார் நண்பர்.