28.12.1915 அன்று எஸ்.பி.சின்ஹா தலைமையில் பம்பாய் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர் நிலைமையைப்பற்றிய ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றுவதற்கு காந்தியடிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இந்தியாவுக்குத் திரும்பியிருந்தார். அந்தமான் சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த திலகர் அந்த மாநாட்டில் முக்கிய விருந்தாளியாக பங்கேற்றார். திலகரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கில் பல்வேறு ஊர்களிலிருந்து மக்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எழுச்சியூட்டும் வண்ணம் திலகர் அன்று சிறப்புரையாற்றினார்.