Home

Showing posts with label வஞ்சினம். Show all posts
Showing posts with label வஞ்சினம். Show all posts

Saturday, 16 April 2016

வஞ்சினங்களின் காலம் - (திரைப்படம் பற்றிய கட்டுரை)




வேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு. அது நெருங்கி வருபவர்களையும் எரித்துப் பொசுக்கும். வைத்திருப்பவர்களையும் எரித்துப் பொசுக்கும்.