Home

Showing posts with label வடக்குவாசல். Show all posts
Showing posts with label வடக்குவாசல். Show all posts

Sunday, 13 August 2023

உயரத்தை நோக்கி - சிறுகதை

 ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்ததும் பத்மாவுக்கு சிரிப்பு வந்தது. ஒரே ஒருநாள் பழக்கத்தில் ஒரு வாரமாகத் தொடர்ந்து வரத் தொடங்கிவிட்டது. புதிய ஊரில் புதிய நட்பு. வாழ்க்கைக்கான ஒரு திசையைத்தேடி தன்னைப்போலவே இடம்பெயர்ந்து வந்ததாக இருக்குமோ என்று தோன்றியது. உள்ளே சென்று வழக்கம் போல கைநிறைய அரிசியை அள்ளிவந்து வைத்தாள். அது கொத்தியெடுக்கும் வேகத்தையே நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்தாள். புத்தம் புதிய ஜன்னல் திரைச்சீலை காற்றில் அசைந்தது. பதினோரு மணியளவில் கூட காற்றின் குளுமை ஆச்சரியப்படவைத்தது. நடந்து அருகிலிருந்து மற்றொரு ஜன்னலருகே சென்றாள். பளிச்சென்றிருந்த வானமும் அருகருகே நின்றிருந்த உயர்ந்த கட்டிடங்களின் வரிசைகளும் மலைப்பைத் தந்தன.

Sunday, 26 September 2021

பார்வை - சிறுகதை

 

மது நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் இல்லத்தில் ஒரு மாதம் கழித்து நடக்கவிருக்கும் ஆண்டுவிழாவில் போட்டிகளுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் செல்லப்பா. திடீர்திடீரென்று அலுவலக ஆணைக்குக் கட்டுப்பட்டு மும்பை, கொச்சின், கல்கத்தா என்று புறப்பட்டுச் செல்கிற சூழல்களுக்கிடையே பணிபுரிகிறவன் இப்படியெல்லாம் விசேஷநிகழ்ச்சிக்கு தீர்மானமாக தேதி ஒதுக்கித்தருவதில் இருக்கிற சிரமங்களை அவருக்குப் புரியவைப்பது எப்படி என்று தடுமாற்றமாக இருந்தது. பத்திரிகைகளில் கதையெல்லாம் எழுதுகிறவன் கேட்டால் மறுக்கமாட்டான் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் வந்திருந்தார். 

Sunday, 5 April 2020

பார்வை - சிறுகதை



ம் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் இல்லத்தில் ஒரு மாதம் கழித்து நடக்கவிருக்கும் ஆண்டுவிழாவில் போட்டிகளுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் செல்லப்பா.