குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள முடிந்த பெரியவர்கள், குழந்தைகளின் பார்வையில் ஒவ்வொன்றயும் பார்த்து சொற்களை இணைத்து உருவாக்கும் பாடல்கள் இரண்டாவது பிரிவில் அடங்கும்.