கராச்சியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் காந்தியடிகள் முதன்முதலாக உரையாற்ற நேர்ந்தபோது இந்தியச் சமூகம் பெண்களை நடத்தும் விதத்தைப்பற்றிய தன் ஆற்றாமையை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். நம் குடும்பங்களிலும் இதயத்திலும் ஓர் அரசியாக வைத்து மதிக்கவேண்டிய பெண்களை நாம் நிலம், வீடு, தங்க ஆபரணங்களைப்போன்ற பாதுகாக்கப்படவேண்டிய சொத்துகளைப்போல நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம் பிரச்சினைகள் அனைத்தும் அந்தக் கருத்துருவிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.