கொலைகாரப் பட்டத்தோடு ஊருக்குள் திரும்பி வந்திருக்கிறேன். அந்தக் கொலையைப் பற்றி அதிகம் சொல்ல விருப்பமில்லை. எந்தச் சூழ்நிலையில் இந்தக் கொலையைச் செய்ய நான் -தூண்டப்பட்டேன் என்று யோசித்து முடிவெடுப்பவர்களுக்குத்தான் இது நியாயமாய்ப்படும். மற்றவர்கள் கண்களுக்கு இது கொலைதான். எத்தனையோ பறவைகளை ரத்தம் சிந்தக் கொன்றிருக்கிறேன். ஆனால், ஒரு வேட்டைக்காரனாகிய என் வாழ்க்கையில் எந்த மனித உயிரையும் கொல்லும் வெறியோ வேகமோ ஒருபோதும் இருந்ததில்லை என்பதுமட்டும் உண்மை.