பள்ளிக்கூட அனுபவமொன்று நினைவில் எழுகிறது. எங்கள் ஆசிரியர் ஒருமுறை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த வீடூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார். கடல்போல தளும்பிய அந்தத் தண்ணீர்ப்பரப்பை அன்று ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தோம். பொழுதுபோவது தெரியாமல் மாலை வரைக்கும் விளையாடிவிட்டு ஊருக்குத் திரும்பினோம்.