Home

Saturday, 11 October 2025

ஒரு குடிசை காத்திருக்கிறது

 

பள்ளிக்கூட அனுபவமொன்று நினைவில் எழுகிறதுஎங்கள் ஆசிரியர் ஒருமுறை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த வீடூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார்கடல்போல தளும்பிய அந்தத் தண்ணீர்ப்பரப்பை அன்று ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தோம்பொழுதுபோவது தெரியாமல் மாலை வரைக்கும் விளையாடிவிட்டு ஊருக்குத் திரும்பினோம்.

பேராசையின் அழிவுப்பாதை

  

திருஞானசம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அவற்றின் பெயர்கள் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம் ஆகும். கால ஓட்டத்தில் எலிவிருத்தமும் கிளிவிருத்தமும் காணாமல் போயின. எஞ்சியிருப்பது நரிவிருத்தம் மட்டுமே.

ஒரு வெற்றிக்குப் பின்னால்

 

எண்பத்தைந்து வயதைக் கடந்த எழுத்தாளரான சுப்ர.பாலன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், ஆன்மிகக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய படைப்புகள் கல்கி, அமுதசுரபி, கலைமகள் என பல இதழ்களில் இடம்பெற்று வருகின்றன.

Sunday, 5 October 2025

இமயமலை : ஒரு பண்பாட்டுப்பயணம்

  

புதுச்சேரியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது எங்கள் தாத்தா வீட்டுக்கு அருகிலேயே ஒரு நூலகம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அந்த நூலகத்துக்குச் சென்று படிப்பேன். அவ்விதமான வாசிப்பில் என் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று ஜீவன்லீலா.  சாகித்திய அகாதமி வெளியிட்ட அந்தப் புத்தகத்தை எழுதியவர் காகா காலேல்கர். ஆங்கிலம் வழியாக, பி.எம்.கிருஷ்ணசாமி என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.

நிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம்




சென்னையை நாங்கள் பெயரளவில் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு அதை எப்போது பார்ப்போம் என ஏங்கியிருந்த ஒரு காலம் உண்டு. அப்போது அந்த நகரத்தைப் பார்த்தவர்கள் சொல்கிற ஒவ்வொரு செய்தியும் எங்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும்.

மகத்தான இயற்கை ஆர்வலர் : கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு அஞ்சலி

 

பள்ளிக்கூடத்தில் நான் படித்துவந்தபோது, காடு, விலங்குகள் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்துவந்தேன். ஐம்பது, நூறு மரங்களைக் கொண்ட தோப்பைப் பார்த்தாலே பரவசமுறும் வயதிலிருந்த எனக்கு காட்டைப்பற்றிய சித்திரங்களை அளித்த படைப்புகள் என் வாசிப்புக்கு உகந்தவையாக இருந்தன. அன்று முழுதும் கற்பனையில் திளைத்திருக்க அச்சித்திரங்களே போதுமானவையாக இருக்கும். 

Monday, 29 September 2025

கற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை

 

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இறுதித்தேர்வு விடுமுறைக்காகக் காத்திருப்பேன். அந்த விடுமுறையில்தான் தாத்தா வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். போகும்போது அம்மாவோ அப்பாவோ யாராவது ஒருவர் எனக்குத் துணையாக  வந்து தாத்தா வீட்டில் விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். ஒரு வாரமோ, பத்து நாட்களோ கழிந்ததும் தாத்தா என்னைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவைப்பார். நானாகவே ஊருக்கு வந்து சேர்ந்துவிடுவேன்.