Home

Sunday, 30 November 2025

எஸ்.எல்.பைரப்பா : உண்மையின் அழகு

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பிளேக் என்னும் நோய் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது.  ஓராண்டு காலம் நீண்ட தீவிரமான மருத்துவச் சிகிச்சையின் விளைவாக ஒரு வழியாக பிளேக் தடுக்கப்பட்டது. எனினும் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும்  பிளேக் நோய் மீண்டும் பரவத் தொடங்கி கிராமங்களிலும் நகரங்களிலும் பல உயிர்களைப் பலி வாங்கத் தொடங்கியது.

மின்மினிகளின் காலம்

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து பலர் குடியேற்றப்பட்டனர். தேயிலைத்தோட்ட வேலை என்பது கிட்டத்தட்ட மரணக்குழியில் இறங்கிச் செல்வதற்கு இணையான ஒன்றாக இருந்த காலம் அது. ஆயினும் ஒவ்வொரு நாள் உழைப்புக்கும் கூலி கிடைக்கும் என்னும் உத்தரவாதத்தை மட்டுமே நம்பி பலர் அங்குக் குடியேறினர்.

மகத்தான அனுபவத்தை நோக்கி

 

ஒரு கவிதை என்பது பல நேரங்களில் உலகியல் சார்ந்த ஒரு கணத்திலிருந்து பீறிட்டு வெடித்தெழுவது என்றபோதும், அது அபூர்வமானதொரு அழகியலைத் தன் சருமமெனக் கொண்டு ஒளிரும் ஆற்றலையும் தனக்குள்ளே கொண்டிருக்கிறது. அந்த அழகியல் வழியாகவே அக்கவிதை இம்மண்ணில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. அவ்வழகியலால் தூண்டப்பட்டு ஒரு வாசகனின் நெஞ்சில் எழும் எண்ணங்கள் வெவ்வேறு தளங்களைத் தொட்டுத்தொட்டு அலையும்தோறும் உருவாகும் மன எழுச்சி, கவிஞரின் மன எழுச்சிக்கு இணையானதொரு அனுபவம். கவிஞரும் கவிதை வாசகரும் இணைந்து நிற்கும் அபூர்வமான புள்ளி அது.

Sunday, 23 November 2025

இலக்கிய வாசிப்பைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்

 

 பாவண்ணன் நேர்காணல்

 கேள்விகள் : ஜி.மீனாட்சி

          

 எழுத்தாளர் பாவண்ணன் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி, தனி முத்திரை பதித்து வருபவர். ஆழமான, நுணுக்கமான விஷயங்களை, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது அவரது வழக்கம்.

சத்திரம்

  

புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் ஓடும் எல்லாப் பேருந்துகளும் எங்கள் கிராமமான வளவனூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டும் இறக்கிவிட்டும் செல்லும். ஆனால் அந்த நிறுத்தத்தின் பெயரை ஒருவரும் வளவனூர் என்று சொல்வதில்லை. வளவனூர் சத்திரம் என்று சொல்வதுதான் வழக்கம். அந்த அளவுக்கு சத்திரம் என்னும் பெயர் மக்களின் மனத்தில் இன்றளவும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.

சு.வேணுகோபால் : ஒளியும் இருளும்

 

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பன்முக ஆளுமை. கரிசல் காட்டு வாழ்க்கைக்கு ஓர் இலக்கிய முகத்தை அளித்தவர் அவர். கரிசல் மண்ணையும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கைப்போக்குகளையும் முன்வைத்து எண்ணற்ற சிறுகதைகளைப் படைத்தவர். முன்னொரு காலத்தில் தெலுங்கு பேசும் பிரதேசத்திலிருந்து வெளியேறி கரிசல் காட்டில் குடியேறி, நிலம் திருத்தி ஒரு சமூகமாக நிலைகொண்டு வாழத்தொடங்கிய ஒரு காலட்டத்தை கோபல்ல கிராமம் என்னும் நாவலாக எழுதி ஒரு முக்கியமான வகைமைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தவர்.

சா.கந்தசாமியின் படைப்புலகம்

 

தமிழ் நாவல் வரிசையில் செவ்வியல் படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் சாயாவனம் நாவலை எழுதியவர் சா.கந்தசாமி.  அதைத் தொடர்ந்து அவர் எழுதிய தொலைந்து போனவர்கள், அவன் ஆனது, சூரிய வம்சம், விசாரணைக்கமிஷன் ஆகிய நாவல்கள் அவரை தமிழின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக நிலைநிறுத்தின. அவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு 31.08.2020 அன்று கொரானா சமயத்தில் இயற்கையெய்தினார்.